ஆன்லைனில் புத்தகம் வாங்க

Tuesday 7 January 2014

சிறுகதைப் போட்டி 113

அன்பு பரிசு

கணினியின் அருகில் வைக்கப்பட்டிருந்த கைபேசி " குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா " என்று இனியகுரலில் பாடியதுஎடுத்துப் பார்த்தாள் கயல்விழிகவின் பாரதியின் அழைப்பு என்பதை அறிந்து கொண்டவள்,கைபேசியை அமைதிப் படுத்திவிட்டு சென்று விட்டாள்அவள் அலுவலகத்தில் முக்கியக் கூட்டத்தில் இருந்தபடியால்,அழைப்பினை அவளால் ஏற்க இயலவில்லைகூட்டம் முடிய அரை மணி நேரம் ஆயிற்றுமுடிந்ததும் முதல்வேலையாக வந்து கவினை தொடர்பு கொண்டாள்.

எதிர்முனையில் கைபேசி அழைப்பு மணி அடித்ததுசில வினாடிகளில் கவின் தொடர்பில் வந்தான்.

கவின் ! என்னப்பா பண்ற ? சாப்பிட்டாச்சா ? " என்றாள்  கயல்விழி.

ம்ம் ... சாப்பிட்டாச்சுநீ  லன்ச்  டைம்ல கூட பிஸியா என்ன ? இப்போ கூப்பிட்டாலும் போன் எடுக்க மாட்டேங்கற ?  "என்று கேட்டான் கவின்.
"இல்லைப்பாஒரு மீட்டிங்இப்போ  தான் முடிஞ்சதுமுடிஞ்சதும் வந்து உன்னைக் கூப்பிடறேன்இனிமேல் தான்சாப்பிடணும் "
 ! அப்படியா ? சீக்கிரம் போய்  சாப்பிடுசாயந்திரம் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்பை ! " என்றபடிஅலைபேசி இணைப்பைத் துண்டித்தான் கவின்.
 கவின் பாரதி - கயல்விழி . திருமணமாகி சில மாதங்களே ஆன இளம் தம்பதியர்திருமணமான சில  நாட்களிலேயே,இருவரும் அமெரிக்கா வந்து விட்டார்கள்இருவரும் கணினித் துறையிலேயே வேலை பார்த்து வந்தனர்அவர்கள்வாஷிங்டன் மாநிலத்தில் இருக்கும் சியாட்டில் நகரில் வசித்தனர்இருவரும் நல்ல வேலையில்,  நல்ல சம்பளத்துடன்உயர் பதவியில் இருந்தனர்
இத்தனை காலம் பெற்றோரின் அரவணைப்பில் இருந்த கயல்விழிக்குஇன்று அவர்களை விட்டு எங்கோ வெகுதொலைவு தாண்டிநினைத்தாலும் ஓடிச் சென்று பார்க்கவோ கொள்ளவோ முடியாத இடத்தில் நாமிருக்கிறோமே !என்றெண்ணி விக்கித்துப் போவாள்நண்பர்கள் உறவினர்கள் விசேடங்களுக்கு செல்ல முடியாது.இவற்றையெல்லாம் நினைக்கும் போதுஅவளுக்கு இப்படி சம்பாதிப்பது அவசியமா என்று தோன்றும்மனது மிகவும்கஷ்டமாக இருக்கும்இப்படியான பொழுதுகளில் சில சமயம் கவினுடன் பேசினால் என்ன என்றெண்ணி கைபேசியில்அழைத்து அனைத்தையும் கொட்டி விடுவாள்மனம் இலேசாகிவிடும்ஆனால்பல வேளைகளில்இவளதுஅழைப்பிற்கு பதிலேதும் இருக்காதுஏனெனில்கவின் அங்கு வேலை மும்முரத்தில் இருப்பான்அவன் அங்குவேலையை முடித்துக் கொண்டு கயல்விழியை அழைக்கும் போதுஇவள் இங்கு வேலையில்  மூழ்கியிருப்பாள்.மாலையில் அலுவலகம் முடிந்து காரில் செல்லும் அந்த சில நிமிடங்களில்இவர்கள் இருவரும் காலை முதல்மாலை வரை பேச நினைத்ததை எல்லாம் பேசி முடிப்பார்கள்வீட்டிற்குச்  சென்று  களைப்புடன் சாப்பிட்டுவிட்டு உறங்கவே சரியாக இருக்கும்எங்கு போய்  பேசுவது ?
வரவரகயல்விழிக்கு இந்த வாழ்க்கை மீது வெறுப்பு தோன்ற ஆரம்பித்து விட்டதுஎன்ன ஒரு இயந்திரத்தனமானவாழ்க்கை என்று அடிக்கடி அலுத்துக் கொள்ள ஆரம்பித்தாள்பேசாமல் சில காலம் இந்தியாவில் போய்  இருந்தால்என்ன என்றும் எண்ணினாள்ஆனால்அவள் வந்திருந்ததோஒரு வருட கால வேலைக்கான ஒப்பந்தத்தின்அடிப்படையில்நினைத்த நேரத்தில்அந்த ஒப்பந்தத்தையும் மீறிட முடியாதுஎனவேஒருவாறு தன்னையேசமாதானப்படுத்திக் கொள்வாள்.
சோர்வு வந்து கயல்விழியின் மனதினை எட்டிப் பார்க்கும் வேளைகளில் எல்லாம்,  இயற்கையே அவளுக்குஆறுதலும் ஊக்கமும் ஊட்டும்பதினைந்தாம் மாடியில் இருக்கும் அவளது அலுவலகத்தில் இருந்து  பார்த்தால்,சுற்றிலும் இருக்கும் மலைகளில் உறைபனி சூழ்ந்திருப்பது தெரியும்வெயில் சற்று உறைத்து  அடிக்கும்  போது,உறைந்திருக்கும்  பனி கரைந்துகம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் மலைகள் தெரியம்சுற்றிலும்  மதில்சுவர்  போல்அமைந்திருக்கும்  மலைக்கூட்டங்களைக் காண கொள்ளை  அழகாய்  இருக்கும்இயற்கையின்  எழிலில்  தனைமறந்துதன்  சோர்வு  மறந்து  இலயித்து  நிற்பாள்  கயல்விழிஇயற்கை  அவளது  மனதுக்கு புது  தெளிவையும் தன்னம்பிக்கையும்  ஊட்டும்.
இப்படியே கிட்டத்தட்ட ஓராண்டு காலம்  ஓடி  விட்டிருந்ததுகயல்விழிக்கும்அந்த  சூழலும் இடமும்  ஒருவாறு பழக்கமாகி விட்டிருந்ததுஒருவருட கால ஒப்பந்தம் முடியும் தருவாயில் இருந்தது.  அடுத்து அவளுக்கு பல புதியவாய்ப்புகள் வந்து குவிந்தனஆனால்அவளோ எந்த வாய்ப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லைகவினும் அவளைகட்டாயப் படுத்தவோகட்டுப்படுத்தவோ இல்லைஅவளது  மனம்  போல்  விட்டுவிட்டான்.

முதல் மணநாள் வந்ததுஅதனை விமரிசையாக கொண்டாட கவினும் கயல்விழியும் திட்டமிட்டனர்அந்தநகரிலிருக்கும் கணபதி கோவிலுக்கு சென்றுவிட்டு,  மகிழ்வுடன் அந்நாளைக்  கழிக்க எண்ணினர்திட்டமிட்டபடியே,எல்லா இடங்களுக்கும்  சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர்வீடு வந்து சேர்ந்ததும்கயல்விழிக்கு  இன்பஅதிர்ச்சி ஒன்று  காத்திருந்ததுஆம் !!!

வீட்டினுள்  நுழைந்த  கவின்பாரதி - கயல்விழி  தம்பதியரை  ஆரத்தி எடுத்து  இருவரின் பெற்றோரும்  வரவேற்றனர்.ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருசேரகயல்விழி  என்ன  பேசுவதென்றே  தெரியாமல்  திக்குமுக்காடிப்  போனாள்.  கேக்வெட்டி  மண நாளைக்  கொண்டாடிநண்பர்கட்கு  விருந்தும்  கொடுத்தனர்அவ்விடத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.


கவின்பாரதி கயல்விழியிடம் " நீ  கொஞ்ச நாள்  அம்மா அப்பா கூட இந்தியா போயிட்டு வாநீ வந்ததுக்கு பிறகு புதுப்ராஜெக்ட் பாத்துக்கலாம்உனக்கு சர்ப்ரைஸ் தரணும்னு தான்நம்ம அம்மா அப்பா இங்க வர்ற விஷயத்த உனக்குசொல்லலஇது தான் நான் உனக்கு தர்ற  முதல் மணநாள் பரிசு " என்று கவின் பாரதி சொல்லச் சொல்லகயல்விழியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது

 அந்த மகிழ்ச்சி கண்களில் நீராய் கரைபுரண்டு ஓடியதுகண்ணீரும் புன்னகையும் ஒருசேர  கவினுக்கு நன்றிசொன்னாள்  கயல்.


 அன்பு பரிசு

கணினியின் அருகில் வைக்கப்பட்டிருந்த கைபேசி " குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா " என்று இனியகுரலில் பாடியதுஎடுத்துப் பார்த்தாள் கயல்விழிகவின் பாரதியின் அழைப்பு என்பதை அறிந்து கொண்டவள்,கைபேசியை அமைதிப் படுத்திவிட்டு சென்று விட்டாள்அவள் அலுவலகத்தில் முக்கியக் கூட்டத்தில் இருந்தபடியால்,அழைப்பினை அவளால் ஏற்க இயலவில்லைகூட்டம் முடிய அரை மணி நேரம் ஆயிற்றுமுடிந்ததும் முதல்வேலையாக வந்து கவினை தொடர்பு கொண்டாள்.

எதிர்முனையில் கைபேசி அழைப்பு மணி அடித்ததுசில வினாடிகளில் கவின் தொடர்பில் வந்தான்.

கவின் ! என்னப்பா பண்ற ? சாப்பிட்டாச்சா ? " என்றாள்  கயல்விழி.

ம்ம் ... சாப்பிட்டாச்சுநீ  லன்ச்  டைம்ல கூட பிஸியா என்ன ? இப்போ கூப்பிட்டாலும் போன் எடுக்க மாட்டேங்கற ?  "என்று கேட்டான் கவின்.
"இல்லைப்பாஒரு மீட்டிங்இப்போ  தான் முடிஞ்சதுமுடிஞ்சதும் வந்து உன்னைக் கூப்பிடறேன்இனிமேல் தான்சாப்பிடணும் "
 ! அப்படியா ? சீக்கிரம் போய்  சாப்பிடுசாயந்திரம் வந்து உன்னை பிக்கப் பண்ணிக்கறேன்பை ! " என்றபடிஅலைபேசி இணைப்பைத் துண்டித்தான் கவின்.
 கவின் பாரதி - கயல்விழி . திருமணமாகி சில மாதங்களே ஆன இளம் தம்பதியர்திருமணமான சில  நாட்களிலேயே,இருவரும் அமெரிக்கா வந்து விட்டார்கள்இருவரும் கணினித் துறையிலேயே வேலை பார்த்து வந்தனர்அவர்கள்வாஷிங்டன் மாநிலத்தில் இருக்கும் சியாட்டில் நகரில் வசித்தனர்இருவரும் நல்ல வேலையில்,  நல்ல சம்பளத்துடன்உயர் பதவியில் இருந்தனர்
இத்தனை காலம் பெற்றோரின் அரவணைப்பில் இருந்த கயல்விழிக்குஇன்று அவர்களை விட்டு எங்கோ வெகுதொலைவு தாண்டிநினைத்தாலும் ஓடிச் சென்று பார்க்கவோ கொள்ளவோ முடியாத இடத்தில் நாமிருக்கிறோமே !என்றெண்ணி விக்கித்துப் போவாள்நண்பர்கள் உறவினர்கள் விசேடங்களுக்கு செல்ல முடியாது.இவற்றையெல்லாம் நினைக்கும் போதுஅவளுக்கு இப்படி சம்பாதிப்பது அவசியமா என்று தோன்றும்மனது மிகவும்கஷ்டமாக இருக்கும்இப்படியான பொழுதுகளில் சில சமயம் கவினுடன் பேசினால் என்ன என்றெண்ணி கைபேசியில்அழைத்து அனைத்தையும் கொட்டி விடுவாள்மனம் இலேசாகிவிடும்ஆனால்பல வேளைகளில்இவளதுஅழைப்பிற்கு பதிலேதும் இருக்காதுஏனெனில்கவின் அங்கு வேலை மும்முரத்தில் இருப்பான்அவன் அங்குவேலையை முடித்துக் கொண்டு கயல்விழியை அழைக்கும் போதுஇவள் இங்கு வேலையில்  மூழ்கியிருப்பாள்.மாலையில் அலுவலகம் முடிந்து காரில் செல்லும் அந்த சில நிமிடங்களில்இவர்கள் இருவரும் காலை முதல்மாலை வரை பேச நினைத்ததை எல்லாம் பேசி முடிப்பார்கள்வீட்டிற்குச்  சென்று  களைப்புடன் சாப்பிட்டுவிட்டு உறங்கவே சரியாக இருக்கும்எங்கு போய்  பேசுவது ?
வரவரகயல்விழிக்கு இந்த வாழ்க்கை மீது வெறுப்பு தோன்ற ஆரம்பித்து விட்டதுஎன்ன ஒரு இயந்திரத்தனமானவாழ்க்கை என்று அடிக்கடி அலுத்துக் கொள்ள ஆரம்பித்தாள்பேசாமல் சில காலம் இந்தியாவில் போய்  இருந்தால்என்ன என்றும் எண்ணினாள்ஆனால்அவள் வந்திருந்ததோஒரு வருட கால வேலைக்கான ஒப்பந்தத்தின்அடிப்படையில்நினைத்த நேரத்தில்அந்த ஒப்பந்தத்தையும் மீறிட முடியாதுஎனவேஒருவாறு தன்னையேசமாதானப்படுத்திக் கொள்வாள்.
சோர்வு வந்து கயல்விழியின் மனதினை எட்டிப் பார்க்கும் வேளைகளில் எல்லாம்,  இயற்கையே அவளுக்குஆறுதலும் ஊக்கமும் ஊட்டும்பதினைந்தாம் மாடியில் இருக்கும் அவளது அலுவலகத்தில் இருந்து  பார்த்தால்,சுற்றிலும் இருக்கும் மலைகளில் உறைபனி சூழ்ந்திருப்பது தெரியும்வெயில் சற்று உறைத்து  அடிக்கும்  போது,உறைந்திருக்கும்  பனி கரைந்துகம்பீரமாய் நிமிர்ந்து நிற்கும் மலைகள் தெரியம்சுற்றிலும்  மதில்சுவர்  போல்அமைந்திருக்கும்  மலைக்கூட்டங்களைக் காண கொள்ளை  அழகாய்  இருக்கும்இயற்கையின்  எழிலில்  தனைமறந்துதன்  சோர்வு  மறந்து  இலயித்து  நிற்பாள்  கயல்விழிஇயற்கை  அவளது  மனதுக்கு புது  தெளிவையும் தன்னம்பிக்கையும்  ஊட்டும்.
இப்படியே கிட்டத்தட்ட ஓராண்டு காலம்  ஓடி  விட்டிருந்ததுகயல்விழிக்கும்அந்த  சூழலும் இடமும்  ஒருவாறு பழக்கமாகி விட்டிருந்ததுஒருவருட கால ஒப்பந்தம் முடியும் தருவாயில் இருந்தது.  அடுத்து அவளுக்கு பல புதியவாய்ப்புகள் வந்து குவிந்தனஆனால்அவளோ எந்த வாய்ப்பையும் ஏற்றுக் கொள்ளவில்லைகவினும் அவளைகட்டாயப் படுத்தவோகட்டுப்படுத்தவோ இல்லைஅவளது  மனம்  போல்  விட்டுவிட்டான்.

முதல் மணநாள் வந்ததுஅதனை விமரிசையாக கொண்டாட கவினும் கயல்விழியும் திட்டமிட்டனர்அந்தநகரிலிருக்கும் கணபதி கோவிலுக்கு சென்றுவிட்டு,  மகிழ்வுடன் அந்நாளைக்  கழிக்க எண்ணினர்திட்டமிட்டபடியே,எல்லா இடங்களுக்கும்  சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர்வீடு வந்து சேர்ந்ததும்கயல்விழிக்கு  இன்பஅதிர்ச்சி ஒன்று  காத்திருந்ததுஆம் !!!

வீட்டினுள்  நுழைந்த  கவின்பாரதி - கயல்விழி  தம்பதியரை  ஆரத்தி எடுத்து  இருவரின் பெற்றோரும்  வரவேற்றனர்.ஆச்சரியமும் மகிழ்ச்சியும் ஒருசேரகயல்விழி  என்ன  பேசுவதென்றே  தெரியாமல்  திக்குமுக்காடிப்  போனாள்.  கேக்வெட்டி  மண நாளைக்  கொண்டாடிநண்பர்கட்கு  விருந்தும்  கொடுத்தனர்அவ்விடத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது.


கவின்பாரதி கயல்விழியிடம் " நீ  கொஞ்ச நாள்  அம்மா அப்பா கூட இந்தியா போயிட்டு வாநீ வந்ததுக்கு பிறகு புதுப்ராஜெக்ட் பாத்துக்கலாம்உனக்கு சர்ப்ரைஸ் தரணும்னு தான்நம்ம அம்மா அப்பா இங்க வர்ற விஷயத்த உனக்குசொல்லலஇது தான் நான் உனக்கு தர்ற  முதல் மணநாள் பரிசு " என்று கவின் பாரதி சொல்லச் சொல்லகயல்விழியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது

 அந்த மகிழ்ச்சி கண்களில் நீராய் கரைபுரண்டு ஓடியதுகண்ணீரும் புன்னகையும் ஒருசேர  கவினுக்கு நன்றிசொன்னாள்  கயல்.